தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியிருந்த குவைத் ஏர்வேஸ், கொழும்புக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இன்று பிற்பகல் (8) அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 15 முதல் விமானச் சேவைகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இராணுவச் சூழல் காரணமாக, குவைத் ஏர்வேஸ் பெப்ரவரி 28 முதல் தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
பாதுகாப்பின்மை
அதனைத் தொடர்ந்து, மார்ச் 2 முதல் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது, ஆனால் அப்போது நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக விமானச் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டன.

இருப்பினும், 241 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் மார்ச் 31 அன்று குவைத்திலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |