மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு
ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியதாக அறிவித்துள்ளது.
குவைத் வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், விமானங்கள் வேறு திசைகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க வான்படை தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்திருந்தது.
ஈரானின் புரட்சிகர காவல் படை
வான்வழிப் போக்குவரத்தையும் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் பொருட்டு, உள்ளூர் நேரப்படி காலை 4.50 மணிக்கு இந்த மூடல் நடைமுறைக்கு வந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு நிலைமை சீரடைந்து அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டவுடன் நாட்டின் வான்வெளி மீண்டும் திறக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
இந்த நிலமை வளைகுடா முழுவதுக்குமான சிவில் விமானப் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 18 மணி நேரம் முன்