கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்
கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் மற்றும் அதன் எல்லைகள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழு செயலாளர் தஜிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காரமுனை மற்றும் முறாவோடை பகுதிகளில் நடக்கும் எல்லை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு காரைதீவின் நிலங்கள் கல்முனை மாநகர சபையுடன் இணைக்கப்படுவது மற்றும் நிர்வாக ரீதியாகத் தமிழ் அதிகாரிகள் முடக்கப்படுதல் போன்றவற்றைச் சான்றுகளுடன் அவர் விளக்கியுள்ளார்.
இந்த அடையாளச் சிதைவுகளைத் தடுக்கத் தமிழ் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து விரைந்து செயல்பட வேண்டுமெனவும் அவர் அவசர அழைப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |