வலி.வடக்கு காணி விடுவிப்பு கோரி வெடிக்கவுள்ள போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் அடுத்த வாரம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி விடுவிப்பு கோரி இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் (22) ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்த போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் 25ம் திகதி முதல் வெசாக் தினம் வரை அப்பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல்வாதிகள் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரையும் வருகை தருமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில , இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.

இதன்போது வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிறோஸ் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

