மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம்
இயக்கச்சியில் நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டம் போராட்டத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம், இன்று (02.04.2026) காலை 8 மணியளவில் கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் இராணுவமுகாம் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இயக்கச்சியில் உள்ள இராணுவ முகாமில் பொதுமக்கள் 17 பேருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களால் ஓர் கவனயீர்ப்பு போராட்டம் திட்டமிடப்பட்டிருந்து.
நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது
இந்த போராட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும்.
தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது
இதன் காரணமாக குறித்த அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்