நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
புதிய இணைப்பு
நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, கங்க இஹல கோரலே மற்றும் பஸ்பாகே கோரலே பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கேகாலை மாவட்டத்தின் யடியந்தோட்ட பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பகுதிகளுக்கும் சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மண்சரிவுக்கான அறிகுறிகள்
கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, டெல்தோட்ட, மெததும்பர மற்றும் பன்வில பகுதிகளுக்கு நிலை 2இன் கீழ் முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொகுபிட்டிய, அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், கேகாலை பகுதிக்கு நிலை 1இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், ஹங்குரங்கெத்த பகுதிக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க, இரத்தினபுரி மற்றும் இம்புல்பே பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், குருவிட்ட மற்றும் நிவிதிகல பகுதிகளுக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகள் இன்று (03) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (04) நண்பகல் 12:00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது மழை தொடர்ந்தாலோ, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |