தற்கொலை செய்வதற்கு அனுமதி கோரி சட்டத்தரணி கடிதம்
தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்கக் கோரி BAW.அபேவர்தன(BAW Abeywardena) என்ற வழக்கறிஞர், அரசதலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தான் சேவையாற்றிய காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் இருந்து எவ்வித காரணமுமின்றி தன்னை பதவி நீக்கியமையால், மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்ற கடனை செலுத்த முடியாமல் போனதற்காக தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள உள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'கடன் செலுத்த இயலாமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளல்' என்ற தொனிப்பொருளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது சிறு வயது முதல் உயர்தரம் வரையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றதன் மூலம் தான் இந்நாட்டு மக்களுக்கு பாரியளவில் கடன்பட்டிருப்பதாக வழக்கறிஞர் BAW அபேவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
