வடக்கில் சுவீகரிக்கப்படும் தமிழர் காணி : சுமந்திரனின் அதிரடி நடவடிக்கை
வடமராட்சி கிழக்கில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக சட்ட ஆலோசனை முகாமொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையில் முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாம் நேற்று (25) வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசனை
கடந்த (2025.03.28) ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முகாமில், 30 வரையான சட்டத்தரணிகளும் 15 சட்டப்பீட மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்தோடு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், சயந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
