வடக்கில் உள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : செல்வம் எம்.பி வலியுறுத்து

Parliament of Sri Lanka Selvam Adaikalanathan Sri Lanka
By Raghav Mar 13, 2025 04:06 AM GMT
Report

வடக்கில் உள்ள  பல விவசாய நிலங்கள் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் என நாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12.03.2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள் ,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “மேய்ச்சல் தரை இல்லாமையினால் எமது பிரதேச கால்நடைப் பண்ணையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

நிறைவுக்கு வந்த அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு

நிறைவுக்கு வந்த அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு

பண்ணையாளர்கள் 

பல மைல்களுக்கு கால்நடைகளை கொண்டுச் சென்று ஒரு இடத்தில் இருந்து அவற்றை பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது.

வடக்கில் உள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : செல்வம் எம்.பி வலியுறுத்து | Liberation Of Land Under Military Control

கடந்த அரசாங்கங்கள் மேய்ச்சல் தரை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த அரசாங்கம் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை வனஜீவராசிகள் மற்றும் வன திணைக்களங்கள் அரச நிறுவனங்களாகும். இந்த திணைக்களங்களும் நிலங்களைவிடுவிப்பதாக கூறினாலும் அதை செய்வதில்லை.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி திட்டம்

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி திட்டம்

விவசாய நிலங்கள் 

அவர்களுக்கென தனியான சட்டங்கள் இருக்கின்றனரவா என்று தெரியவில்லை. விவசாயிகளின் நிலமாக இருந்தாலும் சரி, மேய்ச்சல் தரையாக இருக்கலாம் இவை அந்த திணைக்களங்களின் கீழே உள்ளன.

வடக்கில் உள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : செல்வம் எம்.பி வலியுறுத்து | Liberation Of Land Under Military Control

அத்துடன் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவர்கள் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் என்று கூறலாம்.

இங்குள்ள விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. கால்நடைகளை விற்பனை செய்தல் மற்றும் பெண்களின் தாலிக்கொடிகளை அடகு வைப்பதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேச காணிகள் : விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேச காணிகள் : விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்

அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026