எரிபொருளுக்கான QR! நிரப்பு நிலையங்களுக்கு வெளியான எச்சரிக்கை
QR முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் நிரப்பு நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவிற்கும் QR முறையின் கீழ் வழங்கப்படும் அளவிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய விசாரணைகள் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் QR குறியீடு இல்லாமல் எந்த வாகனத்திற்கும் எரிபொருளை விநியோகிக்க அனுமதிக்கப்படாது என்றும் ராஜகருணா கூறியுள்ளார்.
தேவையான எரிபொருள்
இலங்கை போக்குவரத்து சபை மூலம் பயணிகள் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும், விவசாய உபகரணங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படும் விதம் குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து தகவல்களைப் பெற்ற பிறகு எரிபொருள் விநியோகம் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும், நிரப்பு நிலையங்கள் மற்றும் வலைத்தளங்களில் உள்ள அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |