சமையல் எரிவாயு உற்பத்திகள் இடை நிறுத்தம்! இலங்கை மக்களுக்கு மற்றொரு நெருக்கடி
SRILANKAN ECONOMY
litro & laugfs suspend
GAS SUSPEND
By Kanna
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
இந் நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதோடு அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக நாட்டில் லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், மீண்டும் நிறுவனங்களின் இவ் அறிவிப்பினால் மக்கள் மேலும் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்