சமையல் எரிவாயு நிறுவனங்களின் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை, விநியோகிக்கும் பணிகள் இயல்பாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவன பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் லிட்ரோ கொள்கலன்களுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை 2021, டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு கொள்வனவுக்கு சேகரிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக (Laughfs Gas)லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே விநியோக முகவர்கள் மூலம், வாடிக்கையாளர்கள் பச்சை முத்திரை நீக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்டு வரும் எரிவாயு கொள்கலன்களை திருப்பித் தரலாம்.
இந்தநிலையில் கொள்கலன்கள் நிறையிடப்பட்டு, கொள்கலன்களில் மீதமுள்ள எரிவாயுவிற்கு வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.