ரில்வின் சில்வாவுக்கு லண்டனில் கிளம்பிய எதிர்ப்பு திட்டமிடப்பட்ட செயல்: விமல் பகிரங்கம்
ரில்வின் சில்வாவுக்கு லண்டனில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு திட்டமிட்டதாக இருக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
ஜனாதிபதித் தேர்தல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாளர்கள் ஜே.வி.பியை எதிர்ப்பதாலேயே லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகச் சிலர் கூறலாம்.
ஆனால் உண்மையில் அங்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு கொள்கை ரீதியிலானதல்ல.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிதியைப் பெற்றுக் கொண்ட போது வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
தொல்பொருள் ஸ்தானங்களில் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டதையும், மாவீரர் நினைவு தினத்தைத் தமிழர்கள் தாம் விரும்பியவாறு அனுஷ்டிப்பதற்குச் சுதந்திரமாக இடமளித்தை மறைப்பதற்காகவும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் எமக்கும் எதிரானவர்கள் என்று காண்பிப்பதற்காகக் கூட அநுர அரசால் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 8 நிமிடங்கள் முன்