காணாமல் போன இளைஞர் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
அங்கொட, வல்போல, சுமேதா மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய கவிந்து மலிஷ கஜநாயக்க என்ற இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய இந்த இளைஞர், அதன்பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை அடையாளம் காணக்கூடிய ஒரு விசேட வெளி அடையாளம் முகத்தில் ஒரு கண்ணுக்கு அருகில் கறுப்பு நிற தழும்பு காணப்படுவதாகும்.
அவர் அடிக்கடி நடமாடும் இடம்
கடைசியாக வீட்டிலிருந்து புறப்படும்போது அவர் ஒரு ரிசேட் மற்றும் காற்சட்டையுடன், ஒரு பயணப் பையையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இளைஞர் தனது கையடக்கத் தொலைபேசியையும் பணப்பையையும் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

அவர் அடிக்கடி நடமாடும் இடமாக அங்கொட நடைபாதை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் பயணிக்க அவர் தயாராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிக்கடை காவல் நிலையம் விசேட விசாரணை
இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக வெலிக்கடை காவல் நிலையம் ஏற்கனவே ஒரு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட பிரிவுகள் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளன.

அதன்படி, காணாமல் போன இந்த இளைஞர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 071 563 7637 அல்லது 077 784 2165 என்ற தொலைபேசி எண்கள் ஊடாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது 0112 862 522 என்ற இலக்கம் ஊடாக வெலிக்கடை காவல் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |