களமுனையில் காதலித்து கரம்பிடித்த முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை (காணொளி)
யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகின்ற போதும் அதன் வடுக்கள், தாக்கங்கள் முடிந்ததாக தெரியவில்லை. மாறாக இன்னும் அவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த யுத்தம் எமது மக்களை, தேசத்தை, உயிர்களை, உடைமைகளை, பணத்தினை என எல்லா விதத்திலும் பல மாறாத வடுக்களை வழங்கிச் சென்றிருக்கிறது.
யுத்தம் கொடியது தான். ஆனால், ஒரு சிறுபான்மை இனத்தை பல சக்திகள் இணைந்து ஒடுக்கி, சிதைத்தது மட்டுமல்லாமல் - கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ரணம் கொண்ட விடயமாக இருக்கிறது.
ஆறுமுகம் செல்வன்
இவர் ஒரு முன்னாள் போராளி. அது மட்டுமல்ல கணவன் - மனைவி இருவருமே முன்னால் போராளிகள் தான். களமுனையில் காதலித்து கரம்பிடித்தவர்கள்.
இருவருமே களமுனையில் காயமடைந்தும் இருக்கின்றனர். செல்வன் காலை இழந்த நிலையில் புதுக்குடியிருப்பு - மல்லிகை தீவில் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை பார்த்து வருகிறார்.
இவ்வாறான ஒரு குடும்பத்தின் நிலை, அவர்களின் தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐபிசி தமிழின் என் இனமே - என் சனமே (பாகம் - 141)
இவர்களுக்கு உதவிட கீழ்காணும் எண்களுடன் தொடர்பு கொள்ளவும்
Whatsapp /Viber +94767776363 / +94212030600 (தாயக கலையகம்)