நரகத்தில் இருக்கும் பிரபாகரன் வருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் - கடும் விமர்சனங்களை அள்ளி வீசும் சரத் வீரசேகர!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பழ நெடுமாறன் நரகத்திலிருந்து தான் அழைத்து வரவேண்டும் என சர்ச்சையான கருத்தை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் அவரை அழைத்து வரவேண்டும் என்றால் பழ நெடுமாறன் அங்கு சென்றே அழைத்து வரவேண்ம் எனவும் தெரிவித்துள்ளார்.
பழ நெடுமாறன் நரகத்திற்கே செல்ல வேண்டும்

புலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் நரகத்திலேயே இருப்பார். தற்போது நரகத்தில் இருக்கம் பிரபாகரன் அங்கிருந்து வருகை தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் எனவும் தொடர் சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்

அதுமட்டுமன்றி பல இலட்சம் மக்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், பழ நெடுமாறனும் நரகத்துக்குச் சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.