விடுதலைப் புலிகள் அப்படியானவர்கள் அல்ல - மர்மத்தை உடைக்கும் பௌத்த பிக்கு..! (காணொளி)
புத்தர் ஒரு இந்து - அவர் ஆரம்பத்தில் இந்து முறைப்படியே வாழ்ந்தவர் எனவும் தையிட்டி விகாரை தமிழர் நிலங்களை களவெடுத்து கட்டிய விகாரை எனவும் நயினாதீவு ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"30 வருட போர் காலத்திலும் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை. தென் இலங்கை வாழ் மக்களுக்கு உண்மை தெரியாது.
ஆரம்பத்தில் இருந்தவர்கள் தனி தமிழீழ விடுதலை புலிகள் அல்ல. ஈபிடிபி, டெலோ,போன்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து காணப்பட்டது.
அந்தக் காலப்பகுதியிலேயே பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டன. ஆனால் அதை நேரடியாக விடுதலைப் புலிகள் எனக் கூற முடியாது.இதை யார் செய்தார்கள் என புரிந்தே பதிலளிக்க வேண்டும்.
புத்தர் இந்து முறைப்படியே வாழ்ந்தவர். ஆனால் தற்போது அனைவரும் சிங்கள பௌத்தம் என தெரிவிக்கின்றனர். அது தவறானது." என தெரிவித்துள்ளார்.
பலரும் அறிந்திராத - அறிய வேண்டிய விடயங்கள் விகாராதிபதியின் பதில்களில் இருந்து,
