ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரா பெருவிழா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தானாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீர்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நன்னாளில் விஷேட பூஜைகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபை இணைந்து நடாத்தும் விசுவாசுவ வருட மஹா சிவராத்திரி பெருவிழாவில் குறித்த ஆலயத்தில் நான்கு ஜாம பூஜைகளும் நடைநெறும்.
நான்கு ஜாம பூஜைகள்
அதாவது முதாலாம் ஜாமம் மாலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் ஆரம்பமாகி 6.30 மணிக்கு பூஜை நடைபெறும்.

இரண்டாம் ஜாமம் 7.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 8.30 மணிக்கு பூஜை நடைபெறும்.
மூன்றாம் ஜாமம் 10.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 11.44 மணிக்கு லிங்கேஸ்சவ பூஜை நடைபெறும்.
நான்காம் ஜாமம் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 4.45 பூஜைகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆலய உள் வீதி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலிப்பர்.
தொடர்ந்து மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதான நிகழ்வும் நடைபெறும்.
சிவராத்திரி தினமான (15) மாலை 6.30 மணி முதல் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கலை நிகழ்வுகள்
வவுனியா பரத நர்த்தன கலாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள், முள்ளியவளை ஐயனார் நாடக கலா மன்றத்தின் நடன நிகழ்வு, மல்லாவி ஆரனி நர்தனா மாணவர்களின் கலை நிகழ்வு, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை மாணவர்களின் நடன நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவன் நடனம், முள்ளியவளை திருமதி சாந்தா தர்சன் ஆசிரியையின் நெறியாள்கையில் நடராஜர் கீர்த்தனை, முள்ளியவளை கல்யாஜ வேலவர் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவ நடனம், துணுக்காய் ஆரனி நர்தனாலய மாணவர்களின் சிவவர்னம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்களின் கோலாட்டம், விரலிசை மன்றம் அளம்பில் கலைஞர்களின் விரலிசை நாதம், முள்ளியவளை நுன்கலை கல்லூரியின் குழு இசை, மாங்குளம் முத்தமிழ் கலா மன்றத்தின் காவடி நடனம் மற்றும் மாந்தை கிழவி வின்னானமும் கலையருவி கலா மன்றத்தின் வில்லுப்பாட்டு என பல்வேறு கலாமன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிவராத்திரி நன்னாளில் சிறப்பாக அரங்கேற உள்ளது என ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினர் தெரிவித்துள்ளனர்.