தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர்(படங்கள்)

Sri Lankan Tamils Tamils Jaffna Nallur Kailasanathar Kovil Sri Lanka
By Shadhu Shanker Dec 09, 2023 09:34 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

இத தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.

தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

 தமிழ் மக்களுடைய பிரச்சனை

அவர்களை சந்தித்து தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்ற விடயத்தையும், நடந்த போர் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பு கூறல் ஒரு முக்கியமான விடயம் என்றும், வெளிநாடுகளின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு முக்கியமான விடயம் என்பது போன்ற பல்வேறு விடயங்களை அடக்கியதாக ஒரு பிரேரணையொன்றை நாங்கள் அதிபர் மற்றும் ஏனையோரிடம் கையளித்திருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர்(படங்கள்) | Mahanayake Thera Tried Meet With The Prabhakran

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்கு சென்று இந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை மக்களாக ஒன்றிணைந்து கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை நோக்கம்.

அரசியல்வாதிகளை சந்திப்பதன் நோக்கம்,அரசியல்வாதிகளுக்கு இப்படியான வேலை திட்டத்தை நாங்கள் செய்கின்றோம் என்பதனை வெளிப்படையாக கூறி இதற்கு குறை கூறக்கூடாது அல்லது குறை கூறும் அமைப்பாக எங்களை பார்க்கக் கூடாது.

குறிப்பாக அரசாங்கத்தினுடைய வேலை திட்டம் அல்லது பௌத்தர்களுடைய வேலை திட்டம் என குறை கூறக்கூடாது என்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளுக்கும் திட்டத்தினை தெளிவாக கூறுவோம். மக்களே தீர்ப்பு கூற வேண்டும் என்பது எமது நோக்கம்.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்

பௌத்தர்களுடைய வேலை திட்டம்

அரசியல்வாதிகள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிபர்களையும் சந்திக்கவுள்ளோம். அதாவது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோரை சந்திக்கவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர்(படங்கள்) | Mahanayake Thera Tried Meet With The Prabhakran

பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து வேலை திட்டத்தினை மக்கள் மயப்படுத்தி மக்கள் மத்தியில் வருகின்ற தீர்வுகள் தான் நிரந்தரமாக இருக்கும் என நாங்கள் யோசிக்கின்றோம்.

குறிப்பாக அஸ்கிரிய பீடத்தினை நாங்கள் சந்தித்தபோது பல விடயங்களை கூறினர். அதாவது சகோதரத்துவம் சமதர்மம் சமாதானம் என்ற அடிப்படையில் வேலை செய்தால் இலங்கை என்ற நாட்டில் பிரச்சனைகள் இருக்காது அப்படி அரசியல்வாதிகள் செய்வதில்லை நீங்கள் இப்படி மக்களிடம் செல்லப்போவதை தான் வரவேற்பதாகவும் நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எனவும் அதனைத் தாம் வெளிப்படையாகவே கூறுவதாகவும் அதற்குத்தான் ஆதரவு தருவதாகவும் கூறினர்.

 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்

அதேபோல மல்வத்துபீட மகாநாயக்க தேரர் ,போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை அப்போதைய அரசாங்கங்களை கேட்டதாகவும் அரசாங்கம் விடாதிருந்தபோது ஆறாவது தடவையாக தான் வவுனியா வரை பிரபாகரனை காண வேண்டும் என்று தான் வந்ததாகவும் ஆனால் அது கைகூடவில்லை.

போர்க்காலத்தில் கூட ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் சமாதானத்தை கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் ஈடுபட்டதாகவும் இப்படி மக்கள் மயமாகி அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் மூலமாக ஒரு தீர்வு வருகின்ற நோக்கம் ஒரு நல்ல நோக்கம் தான் அதை ஆதரிப்பதாகவும் அதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிளிநொச்சி திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மல்வத்துபீட தேரர்கள் பல பணிகளை செய்ததாக புகைப்படங்களையும் தேரர் காட்டினார்" என்றார்.    


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025