பொருளாதார சுமை மக்கள் மீது திணிக்கப்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டம்
mahinda amaraweera
people
press meet
By Vanan
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா நிதிக்காக அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே சேவைக்கு அழைத்துள்ளமையினால், மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படலாம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி