தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sarath Fonseka Current Political Scenario
By Independent Writer Sep 02, 2025 05:04 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

பழிவாங்கிய ராஜபக்சர்கள்

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ​​மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த திட்டத்தின் விளைவாக 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னை சிறையில் அடைத்ததாகவும், தன்னுடன் நெருக்கமாக இருந்த ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உட்பட 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள் | Mahinda Gave The Ltte A Chance To Escape Fonseka

அத்துடன் யுத்தத்தை வெற்றி கொண்ட உயர் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராஜபக்சர்களால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வெளியில் கூட தொழிலைத் தேடிக் கொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள்!

சிறைத் தண்டனை

இதேவேளை மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள் | Mahinda Gave The Ltte A Chance To Escape Fonseka

மகிந்தவைப் பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்ட சரத்பொன்சேகா, ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் எனவும் அவருடைய நிலை தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அநுரவினால் திறந்து வைக்கப்படும் கல்வெட்டுக்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் அநுரவினால் திறந்து வைக்கப்படும் கல்வெட்டுக்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

 


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021