நாளையதினம் மூட்டை முடிச்சுகளுடன் மெதமுலனவிற்கு குடிபெயரும் மகிந்த குடும்பம்
ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்டமூலத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று(10) நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு 7, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறத் தயாராகி வருகிறார்.
அதன்படி, அவர் நாளைதினம்(11) விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்காலையிலுள்ள மெதமுலன இல்லத்திற்கு குடிபெயர்வு
அவர் தங்காலையிலுள்ள மெதமுலன இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களுக்கு போதுமான வசதிகளை வழங்கக்கூடிய வீடு கொழும்பிற்கு அருகில் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும், இந்த சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
