மகிந்த விஜேராம இல்லத்திலிருந்து புறப்பட்டபோது கூறியதும் நாமல் இன்று கூறுவதும்
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி, வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு இன்றளவும் அவர்களுக்கான அடைமொழியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதனையடுத்து, தற்போதைய அரசாங்கம் அந்தச் சலுகைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால் நாமல் ராஜபக்ச அந்தப் பழைய நிலையை மறந்து, பொதுமக்களிடம் பல கூற்றுக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கொழும்பை முற்றுகையிடுவோம்
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றப்பட்டால், கொழும்பை முற்றுகையிடுவோம் என்று அவர்கள் தற்பெருமை பேசினர்.
இருப்பினும், சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அரசாங்கம் அகற்றப்பட்டது குறித்து எமது ஊடகம் உள்ளிட்ட உள்நாட்டு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் அதனை தெளிபடுத்தியிருந்தன.
அதனை மீண்டும் ஒருமுறை இங்கு வழங்கி நாமல் கூறிவரும் கருத்துக்களுடன் ஒப்பிடும் விதத்தை ஆராய்வோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு 07, விஜேராமயவில் அமைந்துள்ள, தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அன்று புறப்பட்டார்.
பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் அந்நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அங்கு கூடியிருந்தனர். அங்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் செல்லுமாறு கூறப்பட்டோம், நாங்கள் செல்கிறோம்” என்று தெரிவித்தார்.
மகிழ்ச்சியாக இருக்கும் நாடு
மேலும், தாம் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரிமைகள் (நீக்குதல்) குறித்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வரும் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அந்த இல்லங்களைக் காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க சுமார் ஒரு வாரம் ஆகும் என்று தெரிவித்தார்.
ஓராண்டுக்குள் நாங்கள் வீட்டை ஒப்படைத்துவிடுவோம். அனைத்துப் பொருட்களின் விவரப் பட்டியலும் முடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இன்று தங்கல்லைக்கு புறப்படுகிறோம்," என்று கூறியிருந்தார்.
மேலும் மனோஜ் கமகே, “நாளைய தினத்துக்கு பிறகு இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாளைய தினத்துக்கு பிறகு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளைக் குறைக்கும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும், பெட்ரோல் விலையைக் குறைக்கும், தேங்காய் விலையைக் குறைக்கும், அரிசி விலையைக் குறைக்கும்.
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் இன்றோடு தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் வாக்குறுதி இந்த நாட்டு மக்களுக்கு அல்ல, விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த அளிக்கப்பட்ட வாக்குறுதி
புலம்பெயர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டது” என்றார். ஜனாதிபதியின் சிறப்புரிமைகள் குறித்த மனு (நீக்குதல்) கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 150 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரைவுக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரே ஒரு வாக்கும் பதிவாகின. அதன்படி, குழு நிலையில் அந்த மசோதா எந்தத் திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் தொடங்கும் திகதியன்று மற்றும் அதற்குப் பிறகு இனி வழங்கப்படாது அல்லது செலுத்தப்படாது எனக் கூறப்படும் கோரிக்கைகள் பின்வருமாறு.
1. முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்பட்ட ஏதேனும் மாதாந்த கொடுப்பனவு;
2.முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலாளர் கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் ஏனைய அனைத்து வசதிகள்.
3. முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் ஆகியவை இதில் அடங்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |