அரசாங்கத்திடம் முன்னாள் அரச தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த நேரத்தில் மக்களுக்கு சிறிது நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு இருப்பதாக அவர் நம்பவில்லை என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு செயல்முறையின் செயல்திறன் குறித்து சிறப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.