மைத்திரிக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு! அலட்சியப் போக்கில் கொடுத்த பதில்
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்ததுடன் நிதி மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். இவை சம்பந்தமாக தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறும் ரவி கருணாநாயக்க, சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இவாவறான குற்றச்சாட்டை தான் கேட்கவில்லை எனவும் அது குறித்து தேடி அறிய எதிர்பார்த்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் மைத்திரயை கடுமையாக விமர்சித்தமை தொடர்பில் கேட்கப்பட்ட போது, யார் அவர் என மறு கேள்வியெழுப்பியு்ளளார் மைத்திரி. அதன் போது ஊடகவியலாளர்கள் ரவி கருணாநாயக்க எனக் கூறிய போது என்ன கூறியுள்ளார்? எனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார்.
அதன் போது உங்களது கோப்புகள் சில அவரிடம் இருக்கின்றதாகத் தெரிவித்துள்ளாரே எனத் தெரிவித்த போது, அவர் கூறியதை நான் கேட்கவில்லை. இரத்தினபுரியில் இருந்து இரவு தான் வந்தேன். என்ன என்று நானும் தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து எதிர்காலத்தில் உங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட போவதாக ரவி கருணாநாயக்க கூறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் தெரிவித்த போது, இந்த அரசியல் உலகத்தில் அதிகமான நெருக்கடிகள். சரியான குழப்பம். இதனால், அவை சாதாரணமானவை. அவை பிரச்சினைகள் அல்ல. நாங்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை என பதிலளித்துள்ளார்.
மேலும் முன்னாள் நிதியமைச்சர் தான் இதனை கூறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் மீண்டும் தெரிவித்த போது, எவரும் கூறட்டும், எதனையும் கூறட்டும் என ரவி கருணாநாயக்கவின் கருத்தை மைத்திரிபால சிறிசேன அலட்சியப்படுத்துவது போல் குறிப்பிட்டுள்ளார்.