உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

2019 Sri Lanka Easter bombings Polonnaruwa Maithripala Sirisena Sri Lanka Easter Attack Sri Lanka
By Eunice Ruth Nov 03, 2023 05:03 PM GMT
Report

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, தற்போது அரசியல் நோக்கத்துக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை முன்வைத்துள்ளததாக அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு | Maithripala Sirisena Easter Attack Sri Lanka 2019

அத்துடன், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாம் அரசியல் பயணத்தில் முறையற்ற வகையில் சொத்து சேர்க்கவில்லை எனவும் நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகுதி தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தென்கொரியா உதவும் : யூன் சுக் இயோல் உறுதி

இலங்கைக்கு தென்கொரியா உதவும் : யூன் சுக் இயோல் உறுதி


சொத்து விபரம்

இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் அதனை சமர்ப்பிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு | Maithripala Sirisena Easter Attack Sri Lanka 2019

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனான வகையில் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு தாம் இலக்காவதாகவும் கூறியுள்ளார். 

இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் : சுரேன் ராகவன் அறிவிப்பு

இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் : சுரேன் ராகவன் அறிவிப்பு

  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026