சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலக நாடுகளுடனும் பலமான உறவை பேணிவரும் ஒரே தலைவர் நான் மட்டுமே - மைத்திரிபால சிறிசேன
சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவை பேணிவரும் ஒரே தலைவர் நான் மட்டுமே என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒருவகை கலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகளுடனான பலமான உறவு

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஆசிய அபிவிருத்தி வங்கியாக இருக்கலாம், சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், உலக வங்கியாக இருக்கலாம், ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ ஆக இருக்கலாம், அவர்கள் அனைவரிடமும், உலகத் தலைவர்களிடமும் ஆதரவையும் பெறுவதும் ஒரு வகை கலையாகும்.
எவருடனும் அச்சமின்றி வாதாடத் தயார் என்பதை நிரூபித்து விட்டேன்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவைப் பேணி அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றவன் நான்.
ரஷ்யா, சீனா அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனியுடன் சிறந்த உறவை பேணி நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டடேன். அந்த ஆதரவைப் பெறுவதில் ஒரு முறையுள்ளது." என்றார்.