மதுபோதையில் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள்!
arrest
police
attack
mullaitivu
mallavi
By Kalaimathy
மல்லாவி பிரதேசத்தில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மல்லாவி அனிஞ்சியங்குள்ம் 2 ஆம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டிலேயே மல்லாவி பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மல்லாவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையிலிருந்த இளைஞர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இருபிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரராசா வயது 33 என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி