யாழ்ப்பாணத்தில் புகையிலை தோட்டத்திற்குள் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
யாழ்ப்பாணத்தில்(jaffna) கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் இன்றைய தினம்(27) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் கஞ்சா செடி
குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கஞ்சா செடியை மீட்டதுடன், அதனை பயிரிட்ட குற்றச்சாட்டில், 42 வயதுடையவரை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவரை சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சுன்னாகம் காவல்துறையினர் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
