யாழில் கடல் ஆமையுடன் சிக்கிய நபர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடல் ஆமை மற்றும் கடல் ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் - குருநகர் இறால் வளர்ப்புத்திட்டம் பகுதியில் வைத்து 57 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 30 கிலோ எடையுடைய உயிருள்ள கடல் ஆமை மற்றும் 20 கிலோ எடையுடைய கடலாமை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
