யாழில் குழந்தையின் தங்க நகையை திருடிய சித்தப்பா
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Gold
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றையதினம் (24) சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்தநிலையில் இன்றையதினம் குழந்தையின் சித்தப்பாவான 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி