சிறுத்தையை கொன்றவர் சிக்கினார்
மின்சார கேபிள்களை இழுத்துச் சென்ற சிறுத்தையை அனுமதியின்றி கொன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஹட்டன்(hatton) காவல்துறை அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை (22) மீட்டதுடன், சிறுத்தையை கொன்ற சந்தேக நபரை கைது செய்ததாக பி.டி.ரத்நாயக்க தெரிவித்தார்.
சிறுத்தையின் உடல் புதைப்பு
நேற்று திங்கட்கிழமை (21ம் திகதி) மரக்கறி தோட்டத்தின் உரிமையாளர், இறந்த சிறுத்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துள்ளார்.
சந்தேகநபர் ஆடு மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருவதாகவும், சிறுத்தை, கோழிகளை வேட்டையாட வருவதால் கோழி மற்றும் ஆடுகளை சிறுத்தையிலிருந்து காப்பாற்றுவதற்காக பண்ணையில் மின்சார வயர்களை இட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனை
ஹட்டன் நீதவானின் உத்தரவின் பிரகாரம், 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |