இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சஜிந்தினி
மன்னாரை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான சஜிந்தினி இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இவர் மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார். 23 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் குழாத்திலும் சஜிந்தினி இடம்பெற்றிருந்தார்
இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்ட திறன் தேடல் திட்டத்தின் போது சதீஸ்குமார் சஜிந்தினியின் ஆற்றல் இனங்காணப்பட்டதாக முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் மகளிர் அணி பயிற்றுநருமான ஹேமன்த தேவப்ரிய தெரிவித்துள்ளார்.
வேகமாக பந்துவீசக்கூடியவர்
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி, சற்று வேகமாக பந்துவீசக்கூடியவர் எனவும் போட்டி அனுபவங்களின் மூலம் இன்னும் முன்னேற்றம் அடைவார் என நம்புவதாகவும் தேவப்ரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து மகளிர் ஏ அணியை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஜிந்தினி பங்கேற்க உள்ளார்
இலங்கை ஏ அணிக்கும் நியூஸிலாந்து ஏ அணிக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் ஏ அணியின் தலைவியாக சத்யா சந்தீப்பனி நியிமிக்கப்பட்டுள்ளார்.
இந்தவகையில இலங்கை மகளிர் ஏ குழாமில் சத்யா சந்தீப்பனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரட்ன, விமோக்ஷா பாலசூரிய, லிஹினி அப்சரா, லிமன்சா திலக்கரத்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிக்கா செவ்வந்தி, பியூமி வத்சலா, ரந்தி ப்ரேமரத்ன, சதீஸ்குமார் சஜிந்தினி, ரஷ்மி சில்வா, சமுதி ப்ரபோதா, தாருக்கா ஷெஹானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |