மன்னாரில் ஐஸ் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுட் தண்டனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மன்னார் ஐஸ் போதை பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்றைய தினம் (04) மன்னார் மேல் நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.
மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதூர தன்மை
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மிஹால் தலைமையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியாயமான சந்தேகம்
எதிரி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர்.டி சில்வாவுடன், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் முன்னலையாகியுள்ளனர்.
வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் முன்னிலையாகியுள்ளார்.
வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
