வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
Mannar
Sri Lanka
By Independent Writer
Courtesy: nayan






பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்றைய தினம் (21) காலை உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி கம்பத்திற்கு அருகாமையில் எழுந்தருளியதை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு அபிஷேகம் இடம் பெற்றது.
சிறப்பாக இடம்பெற்ற கொடியேற்ற பெருவிழா
அதனைத்தொடர்ந்து கொடியேற்ற பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.
இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






4ம் ஆண்டு நினைவஞ்சலி