மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு!

Mannar Sri Lanka India Gautam Adani
By Kalaimathy Feb 24, 2023 11:52 AM GMT
Report

 மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டம், சர்வாதிகராமான முறையில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ, விரிவுபடுத்தலின் போதோ மன்னார் மக்களின் ஆலோசனையோ கருத்துக்களையோ அரசாங்கம் உள்வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் மன்னார் பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பிரஜைகள் குழுவினரால் குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,   

“மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மக்களுக்கு பேரிடிச் செய்தி

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

மன்னார் தீவு பகுதியில் முன்னர் அமைக்கப்பட்டது போன்று, இதுவும் மிகப்பெரியதொரு காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது என்ற செய்தி எங்களுக்கு ஒரு பேரிடியாக கிடைத்திருக்கின்றது.   

எமது மன்னார் மாவட்டத்து மக்கள் இந்த காற்றாலை பிரச்சினையின் காரணமாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை அமைதி வழியிலே சாத்வீகமான முறையிலே நடத்தி இந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அதிபருக்கும் தங்களுடைய ஆதங்கங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

இந்த காற்றாலை மின் பூங்கா திட்டத்தின் மூலமாக மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கூட அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காமல் மக்களுடைய வேண்டுகோளை புறந்தள்ளி திரும்பவும் தெற்கு பகுதியில் முடித்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.   

இந்த விசயத்தை மக்கள் சார்பாக நாங்கள் கவலையுடனும் ஆதங்கத்துடன் திரும்பவும் எங்களுடைய அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.   ஏற்கனவே தலைமன்னார் தொடக்கம் தாழ்வுபாடு வரை கிட்டத்தட்ட 36 காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன.

மீன் பிடியில் வீழ்ச்சி

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தலைமன்னார், நடுக்குடா ,பேசாலை, பெரியகரிசல், புதுகுடியிருப்பு, சின்னகரிசல், தோட்டவெளி, தாழ்வுபாடு, கீரி போன்ற கிராமங்கள் இந்த காற்றாலை மின் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறன.

இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மீன்பிடி, சிறு விவசாயம், அதே போல் அந்த பகுதியில் இருக்கின்ற பனை, தென்னை வளங்களை பயன்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.    ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக மீனவர்கள் மீன்பிடியிலே கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்திய மீனவர் வருகையினால் பாதிக்கப்பட்டிருக்கும் எங்கள் மக்கள் இந்தக் காற்றாலை அமைப்பின் மூலமாக பாரம்பரிய கரவலை தொழில் மற்றும் கரையோர மீன்பிடி தொழிலை செய்கின்ற மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அந்த தொழிலை கைவிடக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   

தற்போது மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை மிக உயர்ந்த விலையிலேயே மீனவர்கள் கொள்வனவு செய்து அவர்கள் கஷ்டப்பட்டு கடலுக்கு சென்று வெறும் வலையுடன் மீன்பிடி இன்றி வீடு திரும்புகின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   எனவே தான் நாங்கள் இந்த விஷயத்தை அரசாங்கத்தினதும், அதிபரினதும் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்திருக்கிறோம்.   

வறுமையை எதிர்நோக்கும் ஆபத்து

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டு மன்னார் மக்கள் தங்களுடைய அவல நிலையை பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். என்றாலும் கூட இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமல் திரும்பவும் இப்படியான ஒரு செயல் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதை நினைக்கின்ற போது எமக்கு மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.   

நமது மன்னார் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னர் தீவுப் பகுதிக்குள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். நகரமும் தீவுப்பகுதிகுள் தான் அமைந்திருக்கின்றது.   எனவே இத்திட்டத்திற்காக பெருமளவு காணிகள் தனியாரிடம் இருந்து அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டதன் காரணமாக  விவசாயம், கடற்றொழில் அதேபோன்று பனை தென்னை வளங்களினால் தங்களுடைய ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருக்கும் பலர், தற்போதும், எதிர்காலத்திலும் அனைத்தையும் இழந்து ஒரு வறுமை நிலைக்குள் தள்ளப்படவேண்டிய நிலை ஏற்படும். 

 

இதனால் நகரத்தில் இருக்கின்ற வியாபாரிகளின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான துன்ப நிலையில் தான் நாங்கள் மன்றாட்டமாக இந்த அரசாங்கத்திடம் இச்செயற்திட்டத்தை வேறு பயன்பாடு இல்லாத இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.   

ஏற்கனவே வடபகுதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொடக்கம் இராண்டாயிரம் வரி இந்திய இழுவை படகுகள் மீன்வளத்தை அழித்துக் கொண்டு செல்கிறார்கள்.   இது ஒரு புறம் இருக்க இந்த காற்றாலைகளும் கடற்கரையோரங்களில் அமைக்கும் போது கரையிலே மீன்கள் வருகின்ற நிலைமை குறைவடையும்.

அதானியிடம் வேண்டுகோள்

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

இதனால் கரையோர மீனவர்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில காலங்களில் இந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டிய துன்பமான நிலைக்கும் தள்ளப்படுவார்கள். 

இந்த ஆபத்தை உணர்ந்தவர்களாக மிகவும் வினையமாக இந்த நாட்டு அதிபரிடமும், அரசாங்கத்திடமும் இந்திய தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திடமும் வேண்டி கொள்வது,  நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தேவை. ஆனாலும் மக்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்விடங்களை அழித்து ஏற்படுத்தும் அபிவிருத்தியாக வேண்டாம்.

அப்பிடியான அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவே மன்னார் மாவட்டத்தில் பாவிக்கப்படாத எத்தனையோ ஏக்கர் காணிகள் உள்ளன. அவ்வாறான காணிகளை இனம் கண்டு அந்த இடங்களின் இந்த திட்டத்தை மாற்றி இந்த மன்னார் தீவில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை தந்துவமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024