சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார

CID - Sri Lanka Police Sri Lanka Police Manusha Nanayakkara
By Raghav Jan 21, 2025 10:13 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் இன்று (21) காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தென்கொரிய (South Korea) வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார | Manusha Nanayakkara Appears Before The Cid Today

இரண்டாம் இணைப்பு 

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளார்

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

அதன்படி முன்னாள் அமைச்சர் இன்றையதினம் (21.01.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக நேற்றைய தினம் (20.01.2025) மன்றில் தெரிவித்திருந்தார்.

தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏமாற்றப்பட்டனரா ஈழத்தமிழர்கள்! விடுதலை புலிகளின் தலைவருடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை

ஏமாற்றப்பட்டனரா ஈழத்தமிழர்கள்! விடுதலை புலிகளின் தலைவருடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை

கொழும்பு பிரதான நீதவான்

இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார | Manusha Nanayakkara Appears Before The Cid Today

குறித்த மனு நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனாவுடனான அநுரவின் இரகசிய நகர்வு : பாரிய ஆபத்தில் சிக்கப்போகும் இந்தியா

சீனாவுடனான அநுரவின் இரகசிய நகர்வு : பாரிய ஆபத்தில் சிக்கப்போகும் இந்தியா

குற்றப்புலனாய்வு திணைக்களம்

இதன்படி தற்போது 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார | Manusha Nanayakkara Appears Before The Cid Today

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கான எந்த காரணங்களும் முன்வைக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமது கட்சிக்காரர் கைது செய்யப்படக் கூடும் என ஏற்பட்ட அச்சம் காரணமாக முன்பிணை கோரிய மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக மனுஷ நாணயக்கார சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அறியப்படுத்தியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி