மத்தள விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா விமான நிறுவனங்கள்!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு வளைகுடா விமான நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், இதுவரை எந்த நிறுவனமும் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
காரணம்
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடாவின் பெரிய விமான சேவை நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மத்தள விமான நிலையத்திற்கு மாற்றுவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த விமான நிலையம் வருடத்திற்கு சுமார் 10 இலட்சம் பயணிகளை மட்டுமே கையாளக்கூடிய திறன் கொண்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிரப்புதல் மற்றும் இடைவழிப் பயணங்களுக்காக இலங்கை இலவச தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிட வசதியையும் வழங்கியிருந்தது.
ஆர்வம் இல்லாத நிறுவனங்கள்
இருந்தபோதிலும், விமான நிறுவனங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக உறுதி செய்தாலும், அதைப் பயன்படுத்தும் முனைப்பை இதுவரை காட்டவில்லை என ஜனித ருவன் கொடிதுவக்கு கூறியுள்ளார்.

மேலும், வளைகுடா விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து கலந்துரையாடியதாக வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |