உடனடியாக தகவல் வழங்குங்கள் - பொதுமக்களுக்கு அறிவிப்பு
60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த மருந்துவகைகளை அதிக விலையில் விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை complaints@nmra.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துகளின் விலைகள் 100%, 200 % இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், டொலரின் பெறுமதிக்கமைய, ஆகஸ்ட் மாதம் மருந்துகளின் விலைகளை 9 சதவீத்தில் மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் முறையான விற்பனை விலையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, மருந்துகளின் விலைப்பட்டியலை, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.






