வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களுக்கு இனி பெரும் சிக்கல்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் காவல் பிரிவின் அதிகாரிகளால் தொடங்கப்பட்டுள்ளன.
பணியகத்தின் வேண்டுகோள்
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் உந்துதலின் பேரில் நிறுவப்பட்ட இந்த காவல் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பெறுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட காவல் பிரிவை 0112882228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
