இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக பட்ச கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் 11ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி முதல் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் நேற்றைய தினம் 1,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாக கருதப்படுகிறது.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு லட்சத்து 13,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுள் 14,771 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 709 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களுள் 449 பேர் ஆண்கள் என்பதுடன் 260 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களுள் 70 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டத்தின் பல பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதிகளவிளான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டதையடுத்து புளியாவத்தை நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் இன்ஜஸ்ட்றீ கிராம சேவகர் அலுவலகர் பிரிவு காலவறையின்றி சுயதனிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார காரியலயம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் ஸ்ரீலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்பொழுது கொரோனாத்தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் ஏனைய சில பிரதேசங்களிலும் தற்பொழுதும் சிலபகுதிகளில் சுகாதார நடைமுறை முற்றாக நடைமுறையில் இல்லை எனவும்
வட்டக்கச்சி பகுதிகளில் தருமபுரம் பகுதிகளில் விசுவமடு சந்தைப்பகுதிகள் மற்றும் பிரதான வீதிகளில் எனவும் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சழூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.