மன்னார் காற்றாலை விவகாரம்: ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
Mannar
Anura Kumara Dissanayaka
Sri Lanka
President of Sri lanka
By Shalini Balachandran
மன்னாரில் (Mannar) அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொது அமைப்பு
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்