தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வவுனியா (Vavuniya) - பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குடும்பஸ்தரின் சடலமானது இன்று (11.2.2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் வயது 40 குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றைய தினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |