யாழிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து: ஒருவர் பலி
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
வவுனியா, வைரவப்புளியங்குளம்
வவுனியா, வைரவப்புளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |