நாட்டில் ஒற்றையாட்சி - ஒரே சட்டம்! மீண்டும் உறுதிப்பட கூறும் அரசாங்கம்
People
Sarath Weerasekara
SriLanka
Monopoly
By Chanakyan
இலங்கை போன்ற ஒற்றையாட்சி நாட்டிற்கு அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கட்டமைப்பு பொருந்தும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது.
அவ்வாறு இருப்பின் இனங்கள் மற்ற சமூகங்களிடையே கருத்து வேறுபாடு, விரக்தி மற்றும் பகைமையை உருவாக்கும் என்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.