இலங்கையில் இன்று கொரோனா மாத்திரமே செயற்பட்டுவருகிறது! அமைச்சர் தகவல்
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக இன்று வழமையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொரோனா மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கொரோனா காரணமாக இன்று வழமையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொரோனா மாத்திரமே செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, புதிய வரவு செலவுத் திட்டத்தில் பாரிய சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டதாகவும், அதற்காக 30,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அரச ஊழியர்களுக்கு முறையான சம்பளக் கட்டமைப்பை தயாரிக்கும் வரை இடைக்கால கொடுப்பனவை பரிசீலிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.