கூட்டங்களில் கோமாளி கூத்தாடும் யாழ் எம்.பிக்கள்: சீரழியும் தமிழினம்

Jaffna Sri Lanka Politician Sri Lanka Sonnalum Kuttram
By Shalini Balachandran Mar 25, 2025 10:48 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நடைபெற்று முடிந்த யாழ். (Jaffna) ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பாரிய வாக்குவாதங்களுக்கும் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை முன்னிறுத்தியதுமான  ஒரு கேலிக்கூத்தாக நிறைவுற்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (25) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் வடக்கிற்காக அறிவிக்கப்பட 5ஆயிரம் மில்லியன் உத்தேச ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டம், குடி நீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கூட்டத்தில் இதனை தாண்டி தனிப்பட்ட விடயங்கள் குறித்த வாக்குவாதமே பேசுபொருளாகவும் பிரதான வாய்த்தர்க்கமாகவும் மாறி இருந்தது.

கூட்டத்தில் பெரிதும் வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா, சிறீதரன், ரஜீவன், இளங்குமரன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற எவ்வித வாக்குவாதமும் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தோ அல்லது அவர்களின் தேவைகள் குறித்தோ முன்வைக்கப்படவில்லை.

இடம்பெற்ற வாக்குவாதம் தங்களுக்கு இடையிலான தனிப்பட்ட வன்மங்களை கொட்டுவதாக மட்டும்தான் காணப்பட்டதுடன் இவ்வாறான தலைமைகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை எவ்விதத்தில் நகர்த்திக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக தற்போது மாறியுள்ளது.

சாதாரணமாக ஒரு நாள் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நேர்த்தியாக நடத்த முடியாத தலைமைகளை நம்பி ஐந்து வருடத்தை நம் மக்கள் ஒப்படைத்திருப்பது என்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

மக்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்தில் மாறி மாறி அவமரியாதையாக பேசுவதும், தங்களுக்கு இடையிலான சொந்த பிரச்சினைகளை வாதாடுவதும் சுற்றி இருப்பவர்கள் அதனை தடுக்காமல் ரசித்து பார்த்து சிரிப்பதும் என சிறுபிள்ளைத்தனமாக தமிழ் அரசியல் தலமைகளை காணுவது பாலர் பாடசாலை பிள்ளைகளை நினைவூட்டுகின்றது.

ஒரு சபை என்று வரும் போது சபை நாகரீகம் என்பது அன்றிலிருந்து இன்று வரை பேணப்படக்கூடிய விடயமாக காணப்படுகின்றது. இருப்பினும் இங்கு சபை நாகரீகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் தேர்வு செய்த மக்கள் நம்மை கவனித்துகொண்டு இருக்கின்றார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் சிலர் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

கூட்டம் என்று வரும் பொழுது அதில் கலந்துகொள்ளும் அரசியல் தலைமைகள் அதனை எவ்வித சூழலாக இருப்பினும் மக்களுக்காக சிந்திக்க வேண்டிய கடமை உள்ளது. ஆனால் இங்கு கூட்டத்தை விட்டு வெளியேறுவதுதான் நம் தலைமைகளின் பலமாக காணப்படுகின்றது.

இதனை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் பார்த்தால் அது அவர்களிடத்தில் தமிழ் தலைமைகளின் அரசியல் ஆளுமைகளை வெட்ட வெளிச்சம் போட்டு அவர்களே காட்டியதாக அல்லவா அமையும்.

அண்மைக்காலமாக தமிழ் தலைமைகள் இடத்திலான ஆரோக்கியமான கலந்துரையாடல் என்பது பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் இது தமிழர் பிரதேசத்தில் தென்னிலங்கை அரசியல் ஊடுருவலுக்கு எதிர்காலத்தில் பெரும் வாய்ப்பாக அமையும்.

இவ்வாறே தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்வார்களாக இருந்தால், ஐந்து வருடமும் குரங்கு கையில் மாட்டிய பூமாலை போலத்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் நகரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.


யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா?

யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா?

தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய இளைஞனுக்கு ஆசனம் வழங்க மறுத்த தமிழரசுக் கட்சி

தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய இளைஞனுக்கு ஆசனம் வழங்க மறுத்த தமிழரசுக் கட்சி

பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் இடையூறு: பயணிகள் பெரும் அசெளகரியம்

பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் இடையூறு: பயணிகள் பெரும் அசெளகரியம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023