இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திற்குப் பிறகு இத்தகைய தாக்குதல் நடப்பது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் பொதுமக்களுக்கு இராணுவம் அவசர எச்சரிக்கைகளை அனுப்பியது.
மீண்டும் எச்சரிக்கை
எவ்வாறாயினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகக் கூறியுள்ளன.

Image Credit: L'Orient Today - L'Orient-Le Jour
எனினும், அதற்குச் சற்று நேரத்திலேயே, இஸ்ரேல் நாட்டை நோக்கி மேலும் "கூடுதல் ஏவுகணைக் கணைகள்" ஏவப்பட வாய்ப்புள்ளதாக இராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |