அரசாங்க அதிகாரி போல் நடித்து பண மோசடி...! அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
Sri Lanka
Money
Inland Revenue Department
By Shalini Balachandran
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பனித்தெரு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணம் மோசடி
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தேக நபர் பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளதாக கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் இது போன்ற பண மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்