பொறித் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு மரணம்! காவல்துறையினர் விசாரணை
Sri Lanka Police
Sri Lankan Tamils
Sri Lanka
By Kiruththikan
நேற்று பிற்பகல் பன்சியகம பிரதேசத்தில் 31 வயதுடைய பிக்கு ஒருவர் பொறித் துப்பாக்கியால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநாகலிலுள்ள நா உயன பௌத்த வன மடாலயத்திற்குரியவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மடத்திற்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் பிக்குவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொறித் துப்பாக்கியால் தலையில் தாக்குதல்
அன்றைய தினம் காலை மடத்திலிருந்து வெளியேறிய போதே இவ்வாறு துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர்.
பொதுவாக விலங்குகளை பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொறித் துப்பாக்கியால் தலையில் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொறி துப்பாக்கியை வைத்த சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்